
அரியலூரில் நகைக்கடையின் சுவரை துளையிட்டு 50 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
அரியலூர் காயிதேமில்லத் தெருவை சேர்ந்தவர் சவுந்தரராஜன் (70). இவர், அரியலூர் சின்னகடை வீதியில் நகைக்கடை வைத்து நடத்தி வருகிறார். வழக்கம் போல் இவர் நேற்று (செப்.24), வியாபாரம் முடித்து விட்டு கடையை மூடிவிட்டு சென்றுவிட்டார். இந்நிலையில், இன்று (செப். 25) காலை, இவரது நகைக்கடையின் அருகே தேங்காய் கடை வைத்துள்ள ராமலிங்கம் என்பவர் தனது கடையை திறந்த போது நகைக்கடையின் பக்கவாட்டு சுவரில் துளையிட்டு இருப்பது கண்டு சவுந்தரராஜனுக்கு தகவல் கொடுத்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/308X367
0 Comments