
விருதுநகர் மாவட்டம் ஆமத்தூர் அருகே டாஸ்மாக் கடைக்குச் சென்று சீருடையில் மது அருந்திய சிறப்பு எஸ்.ஐ. ஒருவர் இன்று சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
ஆமத்துர் காவல் நிலையத்தில் கோடீஸ்வரன் என்பவர் சிறப்பு எஸ்.ஐ.ஆக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று பணியில் இருந்தபோது சிவகாசி சாலையில் மத்தியசேனை பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைக்குச் சென்று சீருடையில் இருந்தவாறே மது அருந்தியுள்ளார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2BGTgEg
0 Comments