
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள நகைக்கடையில் தன் கைவரிசையைக் காட்டி ரூ.4 கோடி பெறுமான தங்க நகைகள் மற்றும் ரொக்கம் ஆகியவற்றைத் திருடிய கடைப் பராமாரிப்புப் பணியாளர் ஒருவரை விஜயவாடா போலீஸ் சில மணி நேரங்களில் பிடித்துக் கைது செய்தது.
கைது செய்த நபரிடமிருந்து போலீஸார் 7 கிலோ தங்கம், 19 கிலோ வெள்ளி, ரூ.42 லட்சம் ரொக்கம் கைப்பற்றப்பட்டதாக விஜயவாடா போலீஸ் கமிஷனர் பி.ஸ்ரீனிவாசலு தெரிவித்தார். குற்றவாளியின் பெயர் விக்ரம் குமார் லோஹர், இவர் ராஜஸ்தானைச் சேர்ந்தவர். இந்த நகைக்கடையில் அவர் பரமரிப்பாளராகப் பணியாற்றி வந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/30O29nZ
0 Comments