Crime

ராமேசுவரம்: ​ராமேசுவரத்​திலிருந்து மன்​னாருக்கு படகில் சென்ற இலங்கை தொழில​திபர் உட்பட 4 பேரை அந்​நாட்டு கடற்​படையினர் கைது செய்​தனர். இலங்கை மன்​னார் பகு​தி​யைச் சேர்ந்த தொழில​திபர் ஐங்​கரன் (34). இவர் மீது மன்​னார் மாவட்​டத்​தில் பல்​வேறு வழக்​கு​கள் நிலு​வை​யில் உள்​ளன. இதனால், வழக்​கு​களில் இருந்து தப்​புவதற்​காக தனது குடும்​பத்​துடன் தமிழகம் வந்​து, ராம​நாத​புரத்​தில் வீடு எடுத்து சட்​ட​விரோத​மாக தங்​கி​யிருந்​தார்.

இலங்​கை​யில் ஐங்​கரன் மீது இருந்த வழக்​கு​களின் விசா​ரணை முடிவடைந்​து, அவர் வழக்​கு​களில் இருந்து விடுபட இருந்​த​தால், மீண்​டும் இலங்​கைக்​குச் செல்ல முடி​வெடுத்​தார். இதையடுத்​து, ராமேசுவரத்​திலிருந்து படகு மூலம் நேற்று அதி​காலை மன்​னார் புறப்​பட்​டுச் சென்​றார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/qahgz3c

Post a Comment

0 Comments