Crime

சென்னை: கரூரில் தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயி​ரிழந்​தனர். ஏராளமானோர் காயமடைந்தனர். இந்த சம்​பவம் தொடர்​பான மனுவை விசா​ரித்த உயர்​நீ​தி​மன்ற நீதிப​தி, நடிகர் விஜய்க்கு கண்​டனம் தெரிவித்தார்.

நீதிப​தி​யின் இந்த கருத்​துக்​கு, தமிழக வெற்​றிக் கழகத்​தைச் சேர்ந்த சிலர் சமூக ஊடகங்​களில் மோச​மாக விமர்​சனம் செய்​தனர். இது தொடர்​பாக, சென்னை தெற்கு மண்டல சைபர் க்ரைம் போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்து விசா​ரித்​தனர். இச்​செயலில் ஈடு​பட்​டது புதுக்​கோட்​டையை சேர்ந்த தவெக நிர்​வாகி கண்​ணன் (25), கிருஷ்ணகிரி மாவட்​டம் பர்​கூரைச் சேர்ந்த தவெக உறுப்​பினர் டேவிட் (25), சென்னை அருகே உள்ள அஸ்​தி​னாபுரத்​தைச் சேர்ந்த அதி​முக தகவல் தொழில்​நுட்ப பிரிவு நிர்​வாகி சசிகு​மார் (48), தூத்​துக்​குடி மாவட்​டம் வேம்​பார் பகு​தி​யைச் சேர்ந்த அந்​தோனி சகாய மைக்​கேல் ராஜ் (37) என்​பது தெரிய வந்​தது. அவர்​கள் 4 பேரை​யும் போலீ​ஸார் கைது செய்​தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/h4xQqnl

Post a Comment

0 Comments