Crime

திருச்சி: சென்னை சவுகார்பேட்டை பகுதியில் இயங்கி வரும் பிரபல தங்க நகை விற்பனை மற்றும் தயாரிப்பு நிறுவனத்தின் விற்பனை பிரதிநிதிகளான குணவந்த், மகேஷ் ஆகியோர் கடந்த செப்.8-ம் தேதி தங்க நகைகளை காரில் எடுத்துக்கொண்டு சேலம், கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள நகைக் கடைகளுக்கு விற்பனை செய்வதற்காக புறப்பட்டனர்.

திண்டுக்கல்லில் விற்பனையை முடித்த பின், 3 பேரும் மீதமுள்ள 10 கிலோ தங்க நகைகளுடன் செப்.13-ம் தேதி சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த போது சமயபுரம் அருகே இருங்களூர் பகுதியில் சென்றபோது அவர்களை மற்றொரு காரில் பின்தொடர்ந்து வந்த கும்பல், குணவந்த், மகேஷ், பிரதீப்கான் ஆகியோர் முகத்தில் மிளகாய் பொடியை தூவி 10 கிலோ நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/FjLlhIZ

Post a Comment

0 Comments