
சென்னை தி.நகரைச் சேர்ந்த பிரபல தொழில் அதிபர் சுப்பிரமணி (55). இவருக்கு மடிப்பாக்கத்தில் 8 இடங்களில் சொத்துகள் உள்ளன.
இந்நிலையில், இவர் கடந்த ஆகஸ்ட் மாதம், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகார் கூறியிருப்பதாவது: எனக்குச் சொந்தமாக சென்னை கீழ்க்கட்டளை பகுதியில் ரூ.2 கோடி மதிப்புள்ள காலி வீட்டு மனை இருந்தது. நான் இறந்து விட்டதாகக் கூறி, என் பெயர் கொண்ட கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த மற்றொரு நபரின் இறப்பு சான்றிதழைப் பயன்படுத்தி, எனக்கு பிரியா என்ற மகள் இருப்பதாக,, அவர் பெயரில் போலியான வாரிசு சான்றிதழ் பெற்றுள்ளனர். அந்த ஆவணங்கள் மற்றும் ஆள் மாறாட்டம் மூலம் எனது ரூ.2 கோடி சொத்தை அபகரித்து விற்பனை செய்துள்ளனர். எனவே, இதில் தொடர்புடையவர்களைக் கைது செய்து, எனது சொத்தை மீட்டுத் தர வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/IHzmchS
0 Comments