
சென்னை: சென்னை, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஈஞ்சம்பாக்கத்தில் வசித்தவர் சிரஞ்சீவி தாமோதர குப்தா (56). சென்னை அண்ணா சாலையில், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் மொத்த விற்பனை கடை வைத்திருந்தார். இவருக்கு ரேவதி (45) என்ற மனைவியும், ரித்விக் ஹர்ஷத் (15), தித்விக் ஹர்ஷத் (11) ஆகிய இரு மகன்களும் இருந்தனர்.
குப்தாவிடம் கடனுக்கு எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை வாங்கியவர்கள் பணத்தை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர். இதனால் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுத்ததால், குப்தா வேதனையில் இருந்துள்ளார். இந்நிலையில், நேற்று சேலத்தில் உள்ள தனது மாமா முரளியின் வங்கி கணக்குக்கு ரூ.1 லட்சம் அனுப்பி வைத்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/9eOGXqJ
0 Comments