
பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கிக் கிளை ஒன்றில் ராணுவ சீருடையில் நுழைந்த முகமூடி கொள்ளையர்கள் ரூ.20 கோடி மதிப்பிலான தங்க நகைகளையும், ரூ.1 கோடி ரொக்கப் பணத்தையும் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டத்தில் சந்த்ச‌ன் நகரில் பாரத ஸ்டேட் வங்கிக் கிளை இயங்கி வருகிறது. அங்கு நேற்று முன்தினம் மாலை ராணுவ சீருடையில் துப்பாக்கி ஏந்திய 3 பேர் கொண்ட கும்பல் நுழைந்துள்ளது. முகமூடி அணிந்திருந்த அவர்கள் வங்கியின் மேலாளர், காசாளர் உள்ளிட்ட ஊழியர்களை துப்பாக்கி முனையில் மிரட்டி, கட்டிப் போட்டுள்ளனர். மற்ற ஊழியர்களை கழிவறைக்குள் அடைத்து வெளியே பூட்டியுள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/jiAOkaH
0 Comments