
நாமக்கல்: கடன் தொல்லை காரணமாக 3 பெண் குழந்தைகளை வெட்டிக் கொலை செய்துவிட்டு தந்தையும் தற்கொலை செய்து கொண்டார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வேப்பங்கவுண்டன்புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (36). ரிக் நிறு வனத்தில் மேலாளராகப் பணிபுரிந்து வந்த இவர், விவசாயமும் மேற்கொண்டு வந்தார். இவரது மனைவி பாரதி (26), மகள்கள் பிரக்திஷாஸ்ரீ (10), ரித்திகாஸ்ரீ (7), தேவாஸ்ரீ (6), மகன் அக்னீஸ் வரன் (1).
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 3 பெண் குழந்தைகளும் கோவிந்தராஜுடன் உறங்கினர். மற்றொரு அறையில் பாரதி, அக்னீஸ்வரனுடன் உறங்கினார். நேற்று அதிகாலை குழந்தைகளின் அலறல் சப்தம் கேட்டுள்ளது. திடுக்கிட்டு எழுந்த பாரதி அறையில் இருந்து வெளியே வர முற்பட்டுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/FXjEPAw
0 Comments