Crime

சென்னை: போதைப் பொருள் கடத்​தல் கும்​பலை போலீ​ஸார் கைது செய்து வரு​வது​போல், குட்கா வியா​யாரி​களும் கைது செய்யப்பட்டு வரு​கின்​றனர். இதன் தொடர்ச்​சி​யாக சென்னை மேற்கு மண்டல இணை ஆணை​யர் அலு​வல​கத்​தில், இணை ஆணை​யர் திஷா மிட்​டல் தலை​மை​யில் அண்​ணாநகர், கொளத்​தூர் மற்​றும் கோயம்​பேடு காவல் துணை ஆணை​யர்​கள், மாவட்ட உணவுப் பாது​காப்பு அதி​காரி​கள், சுகா​தார ஆய்​வாளர்​களு​டன் கலந்​தாய்​வுக் கூட்​டம் நடத்​தப்​பட்​டது.

இக்​கூட்​டத்​தில் ரகசி​யத் தகவல்​களின் அடிப்​படை​யில் குட்கா வியா​பாரி​களை கைது செய்​வது குறித்​தும், குட்கா வியா​பாரத்தை முற்​றி​லும் தடுக்க கூட்டு ஆய்​வு​கள் மற்​றும் சோதனை​கள் செய்​யும் வழி​முறை​கள் குறித்​தும் ஆலோ​சனை​கள் வழங்​கப்​பட்​டன. இதில், பெருநகர சென்னை மாநக​ராட்​சியி​லிருந்து 20 உணவு பாது​காப்பு , சுகா​தார ஆய்​வாளர்​கள் பங்​கேற்​றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/MV1qagr

Post a Comment

0 Comments