
சென்னை: போதைப் பொருள் கடத்தல் கும்பலை போலீஸார் கைது செய்து வருவதுபோல், குட்கா வியாயாரிகளும் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக சென்னை மேற்கு மண்டல இணை ஆணையர் அலுவலகத்தில், இணை ஆணையர் திஷா மிட்டல் தலைமையில் அண்ணாநகர், கொளத்தூர் மற்றும் கோயம்பேடு காவல் துணை ஆணையர்கள், மாவட்ட உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள், சுகாதார ஆய்வாளர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது.
இக்கூட்டத்தில் ரகசியத் தகவல்களின் அடிப்படையில் குட்கா வியாபாரிகளை கைது செய்வது குறித்தும், குட்கா வியாபாரத்தை முற்றிலும் தடுக்க கூட்டு ஆய்வுகள் மற்றும் சோதனைகள் செய்யும் வழிமுறைகள் குறித்தும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இதில், பெருநகர சென்னை மாநகராட்சியிலிருந்து 20 உணவு பாதுகாப்பு , சுகாதார ஆய்வாளர்கள் பங்கேற்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/MV1qagr
0 Comments