Crime

மதுரை: மதுரையில் போலி செயலி மூலம் ஆன்லைன் டிரேடிங் மோசடி அதிகரித்துள்ளது என்றும், விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் சைபர் க்ரைம் போலீஸார் எச்சரித்துள்ளனர்.

சமீப காலமாக போலி செயலிகளால் ஆன்லைன் டிரேடிங் என்ற பெயரில் மோசடிகள் அதிகரிக்கின்றன. இதில் ஈடுபடுவோர் சமூக வலைதளங்களில் புதிய முதலீடு கம்பெனிகள் தொடங்கி இருப்பதாகவும், அதற்கான புதிய திட்டங்களை அறிமுகம் செய்தும் அப்பாவி மக்களின் ஆசையை தூண்டுகின்றனர். குறிப்பிட்ட தொகை முதலீடு செய்தால் குறிப்பிட்ட நேரத்தில் மார்க்கெட் நிலவரத்திற்கு ஏற்ப கூடுதல் லாபம் கிடைக்கும் என, நம்ப வைக்கின்றனர். இதை நம்பி ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/XjiokeO

Post a Comment

0 Comments