
தாராபுரம்: தாராபுரத்தில் முன் விரோதம் காரணமாக பள்ளி வளாகம் அருகே உயர் நீதிமன்ற வழக்கறிஞர் படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக கூலிப்படையினருடன் தனியார் பள்ளி தாளாளர் போலீஸில் சரணடைந்தார். திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் லிங்கசாமி. இவரது மகன் முருகானந்தம்(45), சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்.
லிங்கசாமிக்கும், அவரது தம்பியான தண்டபாணி(60) என்பவருக்கும் இடையே சொத்து தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. 15 ஆண்டுகளுக்கு முன்கூலிப்படையினரால் லிங்கசாமி வெட்டி கொலைசெய்யப்பட்டார். இக்கொலைக்கான நேரடி சாட்சிகள் இல்லாததால் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட தாகக் கூறப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/6ZGBvti
0 Comments