
சிவகங்கை: திருப்புவனம் அருகே மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாரை போலீஸார் தாக்கிய இடங்களுக்கு சாட்சிகளை அழைத்துச் சென்று சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார், போலீஸார் தாக்கியதில் உயிரிழந்தார். இந்த வழக்கை சிபிஐ டிஎஸ்பி மோஹித்குமார் தலைமையிலான அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். நேற்று முன்தினம் மதுரை ஆத்திகுளத்திலுள்ள சிபிஐ அலுவலகத்தில் அஜித்குமார் தம்பி நவீன்குமார், ஆட்டோ ஓட்டுநர் அருண்குமார், கோயில் காவலாளிகள் வினோத்குமார், பிரவீன்குமார், கோயில் உதவி ஆணையரின் ஓட்டுநர் கார்த்திக்வேல், தனிப்படை வாகன ஓட்டுநரும், காவலருமான ராமச்சந்திரன் ஆகியோரிடம் பல மணி நேரம் விசாரணை நடத்தினர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/nvl0ybq
0 Comments