
திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான அசாம் இளைஞர் ராஜுபிஸ்வகர்மாவை 4 நாள் காவலில் விசாரிக்க திருவள்ளூர் மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் நேற்று போலீஸாருக்கு அனுமதி வழங்கியது. மேலும், நீதிமன்ற வளாகத்தில் ராஜுபிஸ்வகர்மாவை வழக்கறிஞர்கள் தாக்க முயன்ற சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கம் பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமி, கடந்த 12-ம் தேதி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக ஆரம்பாக்கம் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/9NiBDhT
0 Comments