
தாம்பரம்: தாம்பரம் சானடோரியம் பகுதியில் உள்ள அரசு சேவை இல்லத்தில் தங்கிப் படித்த 8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த அரசு சேவை மைய காவலாளியை போக்சோ சட்டத்தில் போலீஸார் கைது செய்தனர். தாம்பரம் சானடோரியம் ஜட்ஜ் காலனி பகுதியில் தமிழக அரசின் சமூக நலத்துறை சார்பாக அரசு சேவை இல்லம் செயல்பட்டு வருகிறது.
இதில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 128 மாணவிகள் தங்கி கல்லூரிகள், பள்ளிகளில் பயின்று வருகின்றனர், இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி கடந்த 4 நாட்களுக்கு முன்பு அரசு சேவை இல்லத்தில் சேர்ந்து குரோம்பேட்டையில் உள்ள அரசு மகளிர் பள்ளியில் 8-ம் வகுப்பு சேர்ந்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/WbZTD8l
0 Comments