Crime

தாம்பரம்: ​தாம்​பரம் சானடோரி​யம் பகு​தி​யில் உள்ள அரசு சேவை இல்​லத்​தில் தங்​கிப் படித்த 8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் துன்​புறுத்​தல் அளித்த அரசு சேவை மைய காவலா​ளியை போக்சோ சட்டத்தில் போலீ​ஸார் கைது செய்​தனர். தாம்​பரம் சானடோரி​யம் ஜட்ஜ் காலனி பகு​தி​யில் தமிழக அரசின் சமூக நலத்​துறை சார்​பாக அரசு சேவை இல்​லம் செயல்​பட்டு வரு​கிறது.

இதில் தமிழ்​நாடு முழு​வதும் பல்​வேறு மாவட்​டங்​களில் இருந்து 128 மாணவி​கள் தங்கி கல்​லூரி​கள், பள்​ளி​களில் பயின்று வரு​கின்​றனர், இந்​நிலை​யில், கள்​ளக்​குறிச்சி மாவட்​டத்​தைச் சேர்ந்த 13 வயது சிறுமி கடந்த 4 நாட்​களுக்கு முன்பு அரசு சேவை இல்​லத்​தில் சேர்ந்து குரோம்​பேட்​டை​யில் உள்ள அரசு மகளிர் பள்​ளி​யில் 8-ம் வகுப்பு சேர்ந்​துள்​ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/WbZTD8l

Post a Comment

0 Comments