
சென்னை ஐஐடி மாணவியிடம் நடத்தப்பட்ட பாலியல் அத்துமீறல் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.
சென்னை ஐஐடியில், மிசோரம் மாநிலத்தை சேர்ந்த மாணவி (20), தொழிற்பயிற்சி மேற்கொண்டு வருகிறார். கடந்த 25-ம் தேதி இரவு ஐஐடி வளாகத்தில் உள்ள திறந்தவெளி அரங்கத்தின் பின்புறம் நடந்து சென்றார். அப்போது, உணவக ஊழியரான ரவுஷன் குமார் (22) என்ற இளைஞர் மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றுள்ளார். இது தொடர்பாக கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் மாணவி கொடுத்த புகாரின்பேரில், ரவுஷன் குமார் கைது செய்யப்பட்டார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/1jPZeXq
0 Comments