Crime

உடுமலை: உடுமலை அருகே அரசு பள்ளி வளாகத்தில் மது அருந்திய ஆசாமிகளை தட்டி கேட்டதால் ஆத்திரம் அடைந்த மர்ம நபர்கள் ஆசிரியர் மீது பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த மடத்துக்குளம் தாலுக்கா காரத்தொழுவு கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். உடுமலை, யு.எஸ்.எஸ் லே அவுட் பகுதியில் வசிப்பவர் செய்யது முகமது குலாம் தஸ்தகீர் (46) இவர் காரத்தொழுவு அரசு பள்ளியில் இரண்டாம் நிலை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இன்று மாலை சுமார் 6 மணியளவில் பள்ளி அருகே உள்ள குடியிருப்பில் இறந்தவரின் வீட்டுக்கு துக்கம் விசாரிக்க வந்த நபர்களில் அடையாளம் தெரியாத நான்கு பேர் பள்ளி வளாகத்தில் மது அருந்தியுள்ளனர்.
இதனைக் கண்ட ஆசிரியர் இங்கே குடிக்க கூடாது என எச்சரித்துள்ளார் .



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/AxFRghn

Post a Comment

0 Comments