
சென்னை, கோவையில் 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இவர்கள் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்துக்கு ஆட்களை திரட்டி மூளைச் சலவை செய்த பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
கோவை உக்கடம் கோட்டைமேடு சங்கமேஸ்வரன் கோயில் அருகே கடந்த 2022-ம் ஆண்டு அக்.23-ம் தேதி கார் வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இதில், காரை ஓட்டி வந்த ஜமேசா முபின் என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக முதலில் மாநில போலீஸார் விசாரித்து வந்த நிலையில் வழக்கு என்ஐஏவுக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து கார் வெடிப்பு தொடர்பாக 15-க்கும் மேற்பட்டோரை என்ஐஏ அதிகாரிகள் அடுத்தடுத்து கைது செய்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/XFt0QdA
0 Comments