
சென்னை: திருவல்லிக்கேணியில் மாநகர பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை பிடித்து, போலீஸாரிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர். சென்னை கொடுங்கையூர் எம்ஆர் நகர் முதலாவது பிரதான சாலை பகுதியைச் சேர்ந்தவர் ஜெ.மனோஜ்குமார்(19). இவர் மயிலாப்பூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.
தப்பியோட முயற்சி: இந்நிலையில் மனோஜ்குமார் சென்ட்ரலில் இருந்து கோட்டூர்புரம் செல்லும் மாநகரப் பேருந்தில் நேற்று முன்தினம் பயணித்தார். அந்த பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்தது. அப்போது பேருந்தில் நின்று கொண்டிருந்த கல்லூரி மாணவி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/9so2cEZ
0 Comments