
அரியலூர்: அடகு கடை பெட்டகத்தில் இருந்த 250 பவுன் நகைகள், 8 கிலோ வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரூ.5 லட்சம் திருடப்பட்டது தொடர்பாக அரியலூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர். மேலும், திருட்டில் தொடர்புடைய ராஜஸ்தானைச் சேர்ந்தவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
ராஜஸ்தான் மாநிலம் வில்வாடா மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாரஸ்மல் மகன் ஆசாத்லோடா(46). அரியலூர் சின்னக்கடை வீதியில் கடந்த 15 ஆண்டுகளாக அடகுக் கடை நடத்தி வரும் இவர், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கும் தனது தாயை பார்க்க ராஜஸ்தான் சென்றுள்ளார். அப்போது, ராஜஸ்தானைச் சேர்ந்த கோபால்தாஸ் மகன் கணையாலால் (38) என்பவரை அடகுக் கடையில் வேலைக்கு சேர்த்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/MWXtQZv
0 Comments