
செங்கல்பட்டு: செங்கல்பட்டில் லாரி கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் 15 கிமீ தூரத்துக்கு விரட்டிச் சென்று பிடித்தனர். கேளம்பாக்கம் பகுதியில் அன்பு என்பவர் சொந்தமாக லாரி வைத்துள்ளார். இவரது ஓட்டுநர் நேற்று காலை மேல்மருவத்தூர் பகுதி கல்குவாரியில் இருந்து லாரியில் ஜல்லி கற்களை ஏற்றிக்கொண்டு, சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் குன்றத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது செங்கல்பட்டை அடுத்த பரனூர் சுங்கச்சாவடியில் வண்டி வந்தபோது, பாஸ்ட் ட்ராக்கில் போதிய பணம் இல்லாததால் சுங்கச்சாவடியை கடக்க முடியாமல் இருந்துள்ளது. இதனைத் தொடர்ந்து லாரியை ஓரம் கட்டிய ஓட்டுநர் உடனடியாக இதுகுறித்து, உரிமையாளரிடம் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து பாஸ்ட் ட்ராக்கில் ரீசார்ஜ் செய்வதற்காக காத்திருந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/YhOJIQR
0 Comments