
செய்யாறு: செய்யாறு அருகே திமுக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டது தொடர்பாக தூசி போலீஸார் 2 தனிப்படை அமைத்து விசாரித்து வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த உக்கம்பெரும்பாக்கம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவராக இருந்தவர் பிரபாவதி. இவரது கணவர் திருமலை(52). இவர், திருவண்ணாமலை வடக்கு மாவட்ட திமுக விவசாய அணி துணை அமைப்பாளராக இருந்தார்.
இந்நிலையில், செய்யாறில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி இருசக்கர வாகனத்தில் நேற்று சென்று கொண்டிருந்தார். சோழவரம் அருகே சென்றபோது பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் திருமலையை வழிமறித்து கத்தியால் வெட்டியுள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/iMlLDGX
0 Comments