Crime

சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் தனியார் ஐஐடி, ஜேஇஇ பயிற்சி மையத்தில் மாணவர்களிடம் கட்டணத்தை பெற்றுக் கொண்டு, பாதியில் பயிற்சியை நிறுத்தியது தொடர்பான புகாரின் பேரில் போலீஸார் அப்பயிற்சி மையத்தில் சோதனை மேற்கொண்டனர். மேலும், பாதிக்கப்பட்டவர்கள் யாரேனும் இருந்தால் புகார் அளிக்கலாம் என காவல்துறை தெரிவித்துள்ளது.

ஐஐடி மற்றும் ஜேஇஇ தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் சென்னை உள்பட நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ‘பிட்ஜி’ என்ற தனியார் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. சென்னையில் கீழ்ப்பாக்கம் மற்றும் கே.கே.நகரில் இப்பயிற்சி மையம் செயல்படுகிறது. இங்குள்ள பயிற்சி மையங்களில் மொத்தம் 191 மாணவர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். மாணவர்களின் பெற்றோரும், இந்தாண்டு தொடக்கம் முதலே பயிற்சி காலத்துக்கான கட்டணத்தை செலுத்தி வந்த வண்ணம் இருந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Xhr7ZK6

Post a Comment

0 Comments