Crime

விருகம்பாக்கத்தில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியின் கார் மோதி 9 வயது சிறுவன் படுகாயம் அடைந்தார்.

விருகம்பாக்கம் நடேசன் நகரைச் சேர்ந்தவர் பிரதீப். இவர் துறைமுகத்தில் பொறியாளராகப் பணியாற்றி வருகிறார். இவரது மகன் தன்வித் (9). அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், சிறுவன் தன்வித் நேற்று முன்தினம் இரவு நடேசன் நகரில் சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்தார். திடீரென சாலையை கடக்க முயன்றபோது, அந்த வழியாக வந்த கார், சிறுவனின் சைக்கிள் மீது மோதியது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/B4mvTLq

Post a Comment

0 Comments