
கோவை: கோவை சரவணம்பட்டி அருகே, பிரியாணி சாப்பிட்டுவிட்டு உறங்கச் சென்ற 8 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சரவணம்பட்டி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
கோவை சரவணம்பட்டி அருகேயுள்ள, சங்கரா கல்லூரி சாலையைச் சேர்ந்தவர் சத்தியபிரபு. இவரது மகன் சஞ்சீவ்(8). இவர், கோவை சரவணம்பட்டி பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று (மே 29) இரவு, சத்தியபிரபு சரவணம்பட்டியில் உள்ள குமரகுரு கல்லூரி அருகே இயங்கி வரும் ஒரு தனியார் கடையில் பிரியாணி பார்சல் வாங்கி வந்தார். பின்னர், வீட்டில் வைத்து பிரியாணியை சத்தியபிரபு, மனைவி மற்றும் மகன் சஞ்சீவ் உள்ளிட்ட குடும்பத்தினருடன் இணைந்து சாப்பிட்டார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/XvmNKO5
0 Comments