Crime

திருவாரூர்: திருத்துறைப்பூண்டி அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயிகள் அடகு வைத்திருந்த 498 பவுன் நகைகள் கையாடல் செய்யப்பட்டுள்ளது ஆய்வில் தெரியவந்தது. இதையடுத்து, சங்கத்தின் செயலாளர் நேற்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே வேப்பஞ்சேரியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், வேப்பஞ்சேரி மற்றும் ஓவரூர் பகுதி விவசாயிகள் கூட்டுறவு கடன், பயிர்க் கடன், நகைக் கடன் பெற்றுள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/RIu9Q0V

Post a Comment

0 Comments