Crime

சென்னை: ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் இருந்து சென்னை எழும்பூருக்கு வந்த சர்க்கார் விரைவு ரயிலில் ரூ.32.44 லட்சம் ஹவாலா பணத்தை எடுத்து வந்த 3 பேரிடம் ஆர்பிஎஃப் போலீஸார் மற்றும் வருமானவரித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ஆர்பிஎஃப் காவல் ஆய்வாளர் செபாஸ்டின் தலைமையில் ஆர்பிஎஃப் போலீஸார் இன்று (வியாழக்கிழமை) காலை கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, 9-வது நடைமேடையில் ஆந்திர மாநிலம் காக்கிநாடா துறைமுகத்தில் இருந்து சென்னை எழும்பூர் வழியாக புதுச்சேரியை அடையும் சர்க்கார் விரைவு ரயில் வந்தது. அந்த ரயிலில் இறங்கி வந்த பயணிகளை கண்காணித்தபோது, 3 பேர் மீது சந்தேகத்தின் அடிப்படையில் அவர்களின் உடமைகளை சோதனை செய்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Iw5Sc37

Post a Comment

0 Comments