
தஞ்சாவூர்: சர்க்கஸ் கூடாரத்தில் இருந்த ஒட்டகத்தை திருடியது யார் என்று, சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு தஞ்சாவூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர். 1990-களுக்கு முன்பு வரை சர்க்கஸ் நிகழ்ச்சிகளில் சிங்கம், புலி, யானை, கொரில்லா, கரடி என பல்வேறு வகையான வன விலங்குகள் பயன்படுத்தப்பட்டு வந்தன. இவற்றைப் பார்ப்பதற்காகவே மக்கள் குடும்பத்துடன் சர்க்கஸ் நிகழ்ச்சிகளுக்கு வருவார்கள். சர்க்கஸ் என்றாலே திருவிழாபோல மக்கள் கூட்டம் நிரம்பி வழியும்.
பின்னர் விலங்குகள் துன்புறுத்தப்படுவதாக புகார்கள் எழுந்ததால், நாடு முழுவதும் சர்க்கஸ் போன்ற நிகழ்ச்சிகளில் வன விலங்குகள் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டது. இதனால் மக்களுக்கு சர்க்கஸ் நிகழ்ச்சிகளுக்குச் செல்லும் ஆர்வம் குறைந்து, அவற்றுக்கு போதிய வரவேற்பு இல்லாத நிலை ஏற்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/CBHN9cg
0 Comments