Crime

சென்னை: வியாசர்பாடியில் ரவுடி கொலை செய்யப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக, தந்தையை கொலை செய்தவரை 5 ஆண்டுகள் காத்திருந்து மகன் பழி தீர்த்த தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை வியாசர்பாடி உதயசூரியன் நகர், 11-வது பிளாக் பகுதியில் வசித்து வந்தவர் ஆட்டோ ஓட்டுநர் ராஜ் என்ற தொண்டை ராஜ் (40). இவர் மீது 3 கொலை உட்பட 12 குற்ற வழக்குகள் உள்ளன. ‘ஏ பிளஸ்’ பிரிவு ரவுடியான இவர் எம்கேபி நகர் காவல் நிலையத்தில் சரித்திரப் பதிவேடு குற்றவாளி பட்டியலில் உள்ளார். பல்வேறு தரப்பிலிருந்து தொடர்ந்து மிரட்டல் வந்ததையடுத்து, இருப்பிடத்தை கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு மணலி சின்னசேக்காடு, வேதாச்சலம் தெருவுக்கு மாற்றினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/bmiRg5L

Post a Comment

0 Comments