Crime

சென்னை: ரூ.1000 கோடி நன்கொடை பெற்றுத் தருவதாக ரூ.35 லட்சம் கமிஷன் பெற்றுக் கொண்டு துபாய் தொழில் அதிபர் தலைமறைவானார். இதையடுத்து, அவரை அறிமுகம் செய்துவைத்த பைனான்ஸ் அதிபரை பணம் கொடுத்து ஏமாந்தவர் கடத்தி தாக்கினார்.

சென்னை அண்ணாநகர் கிழக்கு, நியூ காலனி பகுதியில் வசித்து வருபவர் எட்வின் பிரான்சிஸ் (61). பைனான்ஸ் கன்சல்டன்சி நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த 18-ம் தேதி இரவு அண்ணா நகர், கிழக்கு மெட்ரோ ரயில் நிலையம் அருகிலுள்ள டீக்கடை அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு காரில் வந்த கும்பல், எட்வின் பிரான்சிஸை காரில் கடத்திச் சென்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/SoJ1tnA

Post a Comment

0 Comments