
கோவை: சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், தலைமறைவாக இருந்த மத போதகர் மூணாறில் இன்று (ஏப்.13) கைது செய்யப்பட்டார்.
கோவை மேட்டுப்பாளையம் சாலை, துடியலூரை அடுத்துள்ள ஜி.என்.மில்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் ஜான் ஜெபராஜ்(37). இவர், கோவை காந்திபுரம் கிராஸ்கட் சாலையில் உள்ள, கிறிஸ்துவ ஜெபக் கூடத்தில், மதபோதகராக பணியாற்றி வருகிறார். தவிர, கிறிஸ்துவ பாடல்களையும் இசை நிகழ்ச்சி நடத்தி பாடி வருகிறார். இவர், தமிழ்நாடு மட்டுமின்றி, வெளி மாநிலங்களிலும், வெளி நாடுகளிலும் தொடர்ந்து இசை நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார். இந்நிலையில், இவர் மீது 2 சிறுமிகள் பாலியல் புகார் கூறினர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/JC65ZaS
0 Comments