Crime

திருநெல்வேலி: நெல்லை மேலப்பாளையத்தில் உள்ள திரையரங்கில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கைது செய்யப்பட்ட இம்தியாஸ் (42) என்பவர், தேசிய பாதுகாப்பு சட்டத்தில் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலப்பாளையம் நேதாஜி சாலையில் உள்ள அலங்கார் திரையரங்கில் கடந்த ஆண்டு ‘அமரன்’ திரைப்படம் திரையிடப்பட்டிருந்தது. இந்நிலையில், கடந்த நவ. 16-ம் தேதி திரையரங்க வளாகத்தில் சிலர் பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பினர். இந்த வழக்கில் மேலப்பாளையம் அல்அமீன் நகர் யுனைடட் காலனியைச் சேர்ந்த காதுரையா மகன் இம்தியாஸ் (42) என்பவர் கைது செய்யப்பட்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/TZnc1JW

Post a Comment

0 Comments