
சென்னை: போக்சோ வழக்கின் குற்றவாளியை விசாரணை நீதிமன்றம் விடுதலை செய்தால், அதை எதிர்த்து தாமதமின்றி மேல்முறையீடு செய்ய காவல் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல் துறை டிஜிபிக்கு மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் கடிதம் அனுப்பியுள்ளார்.
போக்சோ வழக்கு ஒன்றை விசாரித்த விசாரணை நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட நபரை போக்சோ வழக்கில் இருந்து விடுவித்தும், இந்திய தண்டனைச்சட்டத்தின் கீழான குற்றங்களுக்கு மட்டும் குறைந்தபட்ச தண்டனை வழங்கியிருந்தது. இந்த தண்டனையை எதிர்த்து குற்றம் சாட்டப்பட்ட நபர் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/s7k5VT3
0 Comments