Crime

திருப்பூர்: பல்லடம் அருகே தாய், தந்தை, மகனை கடந்த நவ. 28-ம் தேதி மர்ம கும்பல் வெட்டிக்கொன்ற வழக்கு 110 நாட்களை எட்டிய நிலையில், வழக்கில் எவ்வித முன்னேற்றமும் அடையாத நிலையில், சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக டிஜிபி இன்று (மார்ச் 18) உத்தரவிட்டார்.

பல்லடம் அருகே சேமலைக்கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த தெய்வசிகாமணி (78). இவரது மனைவி அலமாத்தாள் (75). இவர்களது மகன் செந்தில்குமார் (46) ஆகியோரை கடந்த நவ. 28-ம் தேதி மர்ம கும்பல் கொலை செய்துவிட்டு வீட்டில் இருந்த 8 பவுன் நகையை திருடிச் சென்ற வழக்கு, தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் இதற்கும் கண்டனம் தெரிவித்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/TwyUk3v

Post a Comment

0 Comments