
கோவை அருகே தனியார் பொறியியல் கல்லூரி விடுதியில் சீனியர் மாணவரைத் தாக்கிய ஜூனியர் மாணவர்கள் 13 பேரை இடைநீக்கம் செய்து கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
கோவை பாலக்காடு சாலையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி விடுதியில் சீனியர் மாணவர் ஒருவரை 10-க்கும் மேற்பட்ட ஜூனியர் மாணவர்கள் இணைந்து தாக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகின. முதலாமாண்டு மாணவர்கள் தங்கியிருந்த அறையில் பணத்தை திருடியதாக குற்றம் சாட்டி சீனியர் மாணவரை மண்டியிட வைத்தும், அடித்தும் துன்புறுத்தியுள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/JhuI5ca
0 Comments