Crime

சென்னை: ரூ.35 லட்சம் மோசடியில் ஈடுபட்டதாக ஆப்பிள் வியாபாரி கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை ஆயிரம் விளக்கு பகுதியைச் சேர்ந்தவர் பயாஸ் அகமது (48). வீடு கட்டுமான தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் பயாஸ் அகமது, தான் பெரம்பூரில் கட்டி முடித்த குடியிருப்பிலுள்ள ஒரு இடத்தை, அவரது நண்பர் மூலம் அறிமுகமான திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம், தனக்கர் குளம் கிராமத்தைச் சேர்ந்த ஆப்பிள் பழ வியாபாரி ஸ்ரீகிருஷ்ணன் (45) என்பவருக்கு விற்பனை செய்தார்.

அந்த இடத்துக்கான தொகையை ரூ.35 லட்சத்துக்கு காசோலையாகவும், ரூ.11 லட்சத்து 76 ஆயிரத்தை பணமாகவும் ஸ்ரீகிருஷ்ணன் கொடுத்துள்ளார். ஆனால், ரூ.35 லட்சத்துக்கான காசோலையை, வங்கியில் செலுத்தியபோது பணமில்லாமல் திரும்பி வந்துள்ளது. இது குறித்து கேட்டபோது, பின்னர் தருகிறேன் எனக்கூறி காலம் தாழ்த்தி வந்துள்ளார். ஆனால், பணத்தை கொடுக்கவில்லை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/VEzfXBe

Post a Comment

0 Comments