
சென்னை: நகை, பணத்துக்காக கணவன் - மனைவியை கொலை செய்துவிட்டு கைதாகி, ஜாமீனில் வெளிவந்து தலைமறைவாகி டெல்லியில் மாறு வேடத்தில் பதுங்கியிருந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை துரைப்பாக்கத்தில் வசித்தவர் மாயாண்டி (62). இவரது மனைவி வள்ளிநாயகி (60). இவர்கள் இருவரும் கடந்த 2018 ஏப்ரல் 17-ம் தேதி வீட்டிலேயே கொலை செய்யப்பட்டனர். வீட்டிலிருந்த 12 பவுன் தங்க நகைகள், ரொக்கப் பணம் திருடுபோனது. இக்கொலை தொடர்பாக துரைப்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். இதில், நகை பணத்துக்காக இரட்டை கொலை நடைபெற்றது உறுதி செய்யப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/1nIqTmH
0 Comments