Crime

திண்டுக்கல்: சிறுமலையில் இறந்து கிடந்தவர் நக்சல் அமைப்பைச் சேர்ந்தவரா என்று போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரது உடலை மீட்டபோது டெட்டனேட்டர் வெடித்ததில் 2 போலீஸார் காயமடைந்தனர்.

திண்டுக்கல் அருகேயுள்ள சிறுமலைப் பகுதியில் 17-வது கொண்டை ஊசி வளைவு அருகே தனியாருக்குச் சொந்தமான இடத்தில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் அழுகிய நிலையில் கிடந்தது. துர்நாற்றம் வீசியதையடுத்து அப்பகுதி வழியாகச் சென்றவர்கள் வனத் துறையினர் மற்றும் போலீஸாருக்கு நேற்று முன்தினம் இரவு தகவல் அளித்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/HaqBJ2w

Post a Comment

0 Comments