
ராணிப்பேட்டை: காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டுகள் வீசிய வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி தமிழரசன் கைது செய்யப்பட்டார்.
ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் காவல் நிலையத்தின் மீது கடந்த 2-ம் தேதி மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசிச் சென்றனர். இது தொடர்பாக ஸ்ரீதரன் (28), டோனி மெக்கலின் (23) ஆகியோரை போலீஸார் சில தினங்களுக்கு முன்பு கைது செய்தனர். இதற்கிடையில், முக்கிய குற்றவாளியான தமிழரசன்(48) நேற்று கைது செய்யப்பட்டார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/VFgjLv9
0 Comments