
சென்னை: பள்ளி சென்று திரும்பிய 3 வயது குழந்தையைக் கடத்திய வேலைக்கார பெண் மற்றும் அவரது நண்பருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை ஷெனாய் நகர் பகுதியைச் சேர்ந்த தம்பதியின் 3 வயது குழந்தை அப்பகுதி பள்ளி ஒன்றில் படித்து வந்தார். கடந்த 2019 ஜூலை 18-ம் தேதியன்று பள்ளி முடிந்து வேனில் வந்து இறங்கிய குழந்தையை, வேலைக்காரப் பெண்ணான அம்பிகா (25), அவரது நண்பர் கலிமுல்லா சேட் (30) என்பவரும் சேர்ந்து கடத்திச் சென்று ரூ.60 லட்சம் பணம் கேட்டு அந்த தம்பதியை மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2Vy94tx
0 Comments