Crime

ராணிப்பேட்டை: சிப்காட் அருகே சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் டிப்பர் லாரியை முந்திச் செல்ல முயன்ற கர்நாடகா மாநில அரசு பேருந்து எதிரே வந்த காய்கறி லோடு லாரி மீது நேருக்கு நேராக மோதிய விபத்தில் ஓட்டுநர், விவசாயி உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பேருந்தில் பயணித்த 35 பேர் படுகாயமடைந்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை மாவட்ட ஆட்சியர் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

கர்நாடகா மாநிலம், கோலார் மாவட்டம், முன்பாகல் பகுதியைச் சேர்ந்த 45 பேர் மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய நேற்று வந்தனர். இதற்கான கர்நாடகா மாநில அரசுக்கு சொந்தமான பேருந்தில் அவர்கள் பயணம் செய்தனர். மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி கோயிலில் சுவாமி தரிசனம் முடிந்து அனைவரும் கோலார் மாவட்டம் செல்ல புறப்பட்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/WL583tM

Post a Comment

0 Comments