
சென்னை: புகார் வாங்க மறுத்த போலீஸாரை கண்டித்து காவல் நிலையம் முன்பு தீக்குளித்த ஸ்டீல் பட்டறை தொழிலாளி உயிரிழந்தார். சென்னை புளியந்தோப்பு, திருவிக நகர் 7-வது தெருவைச் சேர்ந்தவர் ராஜன் (42). கொருக்குப்பேட்டையில் சொந்தமாக ஸ்டீல் பட்டறை நடத்தி வந்தார்.
தொழில் நஷ்டத்தால் அதை மூடிவிட்டு, கொருக்குப்பேட்டை, அண்ணா நகர் பகுதியில் முருகன் என்பவருக்குச் சொந்தமான ஸ்டீல் பட்டறையில் கடந்த 3 நாட்களாக கூலி வேலை செய்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் பட்டறையில் பணி செய்து வந்த சக பணியாளரான கொருக்குப்பேட்டை, பாரதி நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பைச் சேர்ந்த மாதவன் (46) என்பவருடன் பணியின்போது வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/q1rdDWG
0 Comments