
மதுரையில் 15 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பாரதிய ஜனதா கட்சியின் மாநில நிர்வாகி எம்எஸ். ஷா போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இதற்கு உடந்தையாக இருந்ததாக மாணவியின் தாயையும் போலீஸார் கைது செய்தனர்.
பாரதிய ஜனதா கட்சியின் மாநிலப் பொருளாதாரப் பிரிவு தலைவராக இருப்பவர் எம்.எஸ்.ஷா. மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே ஆலம்பட்டியில் தனியார் கலை-அறிவியல் கல்லூரி நடத்தி வரும் இவர், அக்கல்லூரியின் தாளாளராகவும் உள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு எம்எஸ்.ஷா 15 வயது பள்ளி மாணவிக்கு ஸ்கூட்டர் வாங்கித் தருவதாகக் கூறி அவரை பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து மாணவியின் தந்தை மதுரை மாநகர் தெற்கு மகளிர் காவல் நிலையத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் புகார் அளித்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Sa6PIBl
0 Comments