
சென்னை: செர்பியாவில் ‘டேட்டா என்ட்ரி’ வேலை எனக்கூறி சைபர் மோசடி வேலைக்காக தமிழர்களை அனுப்பிய 3 பேரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர்.
ஐரோப்பிய நாடான செர்பியாவில் சமையல் உதவியாளர் பணி இருப்பதாக சென்னையைச் சேர்ந்த அப்துல் காதர், ஆண்டனி மற்றும் ஷோபா ஆகியோர் விளம்பரம் செய்துள்ளனர். இதை அறிந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சங்கர் சர்கார் என்பவர், அந்த வேலைக்காக ரூ.3 லட்சம் பணத்தை அவர்களிடம் கொடுத்து, ஒரு வருடமாக காத்திருந்துள்ளார். பின்னர், 2022ம் ஆண்டு லாவோஸ் நாட்டின் டிரைஆங்கில் பகுதியில் வேலை இருப்பதாகக் கூறி, சங்கர் சர்காரை அங்கு அனுப்பி வைத்துள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/X6PnSMQ
0 Comments