
பெரியகுளம்: தேனி அருகே நடந்த கார் - சுற்றுலா வேன் விபத்தில் கேரளாவைச் சேர்ந்த மூன்று பேர் அதே இடத்தில் உயிரிழந்தனர்.
தேனி மாவட்ட எல்லையான காட்ரோடு பகுதியில் இன்று அதிகாலை தேனி நோக்கி கேரளத்தைச் சேர்ந்த கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. எதிரே தேனியில் இருந்து ஏற்காடுக்கு சுற்றுலா வேன் வந்து கொண்டிருந்தது. இரண்டு வாகனங்களும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் பயங்கர வேகத்தில் மோதியது. இதில் காரில் இருந்த கேரளமா நிலம் கோட்டயத்தைச் சேர்ந்த 3 பேர் அதே இடத்தில் உயிரிழந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/XFyCKvu
0 Comments