
திருநெல்வேலி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் விஜய்(25) திருநெல்வேலி அருகே நேற்று கொலை செய்யப்பட்டார். இதில் காதலியின் சகோதரர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சியைச் சேர்ந்தவர் விஜய்(25). இவருக்கும், பாளையங்கோட்டை அண்ணா கீழத்தெருவைச் சேர்ந்த ஜெனிபர் சரோஜா(23) என்பவருக்கும், இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் காதலித்து வந்தனர். கடந்த 10 நாட்களுக்குமுன் தனது காதலனோடு சேர்ந்து வாழ்வதற்காக வீட்டைவிட்டு வெளியேறிய ஜெனிபர் சரோஜா, கள்ளக்குறிச்சிக்கு விஜயின் வீட்டுக்கு சென்றுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/CDViTM9
0 Comments