
சென்னை: அண்ணனை நூதன முறையில் சிக்க வைத்து நீதிமன்றத்தையும், போலீஸாரையும் ஏமாற்றி தலைமறைவாக இருந்த தம்பி கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை கோடம்பாக்கம், பகுதியைச் சேர்ந்தவர் பழனி. இவரது மனைவி கடந்த 2009-ம் ஆண்டு கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், கணவர் பழனி அவரது சகோதரியுடன் சேர்ந்து தன்னையும், தன் மகனையும் தினமும் அடித்து துன்புறுத்துவதாக கூறி இருந்தார். அதன்பேரில் கொலை முயற்சி உட்பட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸார் பழனி, அவரது சகோதரியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/tZ9XYpl
0 Comments