
மனைவி மீதான கோபத்தில் அரசு பெண் பயிற்சி மருத்துவரை தாக்கிய நோயாளி நேற்று கைது செய்யப்பட்டார்.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்தவர் கரிகாலன்(42). காய்ச்சல் காரணமாக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், மருத்துவமனை வார்டில் நேற்று முன்தினம் கரிகாலனுக்கும், அவரது மனைவிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், கரிகாலன் ஆத்திரத்தில் தனது கையில் மருந்து செலுத்துவதற்காக பொருத்தப்பட்டிருந்த வென்ஃப்ளானை கழற்றி வீசியுள்ளார். அப்போது, அங்கு சென்ற பெண் பயிற்சி மருத்துவர், அவருக்கு மீண்டும் வென்ஃப்ளானை பொருத்தி, ஊசி செலுத்திவிட்டுச் சென்றார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/daQvlKP
0 Comments