
திருச்சி: கோலாலம்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்துக்கு நேற்று முன்தினம் இரவு ஏர் ஏசியா விமானத்தில் வந்த பயணிகளை, விமான நிலைய வான் நுண்ணறிவுப் பிரிவு சுங்கத் துறை அலுவலர்கள் சோதனை செய்தனர்.
அப்போது, ஒரு பெண் தனது உடையில் தங்கச் சங்கிலிகளை மறைத்து எடுத்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்தப் பெண்ணைக் கைது செய்த அதிகாரிகள், அவரிடமிருந்து ரூ.27.14 லட்சம் மதிப்பிலான, 359.5 கிராம் தங்கச் சங்கிலிகளை பறிமுதல் செய்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/wgCSyAM
0 Comments